ஆயிரம் வானவில்

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: மணத்தோடு மழைக்காலம்

இந்த பாடலை பற்றி :
மணத்தோடு மழைக்காலம் படத்திலிருந்து ஆயிரம் வானவில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.ஆயிரம் வானவில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணத்தோடு மழைக்காலம் படத்தின் ஆயிரம் வானவில் பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : தானான நானா
நனனானா தனனனா
நநநன்னா ஆஆ ஆஆ

ஆண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஓ ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே

ஆண் : இது வரை யாரும்
எழுதா கவிதை மனதில்
தோன்றிடுதே புன்னகை
எல்லாம் சமுத்திரமாக
பொங்கி வழிகிறதே

ஆண் : { இனி தினம் தோறும்
பூக்காலம் நம் மனதோடு
மழைக்காலம் } (2)

ஆண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே

பெண் : ஓஹோ மலையில்
பிறக்கும் அருவிகள் எல்லாம்
கடலில் கலக்கிறது

ஆண் : மலையில் பிறக்கும்
அருவிகள் எல்லாம் கடலில்
கலக்கிறது எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த இதயங்கள்
இணைகிறது

பெண் : கடவுள் ஒரு நாள்
பூமிக்கு வந்தால் இங்கே
வாழ விரும்பிடுவான்

ஆண் : சேர்ந்து சிரித்து
சேர்ந்து அழுது மீண்டும்
பிரிய தயங்கிடுவான்

பெண் : நதியில் விழுந்த
நிலவின் பிம்பம் நனைவது
கிடையாது

ஆண் : அழகிய உறவுகள்
அருகில் இருந்தால்
சோகம் நமக்கேது

பெண் : இனி தினம்
தோறும் பூக்காலம்
நம் மனதோடு மழைக்காலம்

ஆண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே

பெண் : நேற்று உருண்டு
நாளை ஆகும் காலம்
நிற்காது

ஆண் : ஓஹோ நேற்று
உருண்டு நாளை ஆகும்
காலம் நிற்காது மாற்றம்
கோடி வந்தால் கூட
மனங்கள் மாறாது

பெண் : கல்லும் மண்ணும்
வீடா இல்லை அன்பில்
செய்தது வீடாகும்

ஆண் : கூட்டு புழுவுக்கு
கூட்டால் தானே வண்ணம்
நூறு உண்டாகும்

பெண் : வேடந்தாங்கல்
பறவையை போல
ஒன்றாய் பறக்கிறது

ஆண் : காற்றில் கிளைகள்
தவழ்ந்தால் கூட வேரை
மதிக்கிறது

ஆண் : { இனி தினம் தோறும்
பூக்காலம் நம் மனதோடு
மழைக்காலம் } (2)

பெண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே

ஆண் : ஓ ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண்
முன் பூக்கிறதே

பெண் : இது வரை யாரும்
எழுதா கவிதை மனதில்
தோன்றிடுதே புன்னகை
எல்லாம் சமுத்திரமாக
பொங்கி வழிகிறதே

ஆண் : { இனி தினம் தோறும்
பூக்காலம் நம் மனதோடு
மழைக்காலம் } (2)

பெண் & ஆண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே

மணத்தோடு மழைக்காலம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆயிரம் வானவில் தேடல் சொற்கள்:
ஆயிரம் வானவில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆயிரம் வானவில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆயிரம் வானவில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆயிரம் வானவில் பாட்டு
ஆயிரம் வானவில் ஐடியூன்ஸ், ஆயிரம் வானவில் tamil2lyrics
மணத்தோடு மழைக்காலம் ஆயிரம் வானவில்
ஆயிரம் வானவில் பாட்டு வரிகள்
ஆயிரம் வானவில் படத்தின் பேர்
ஆயிரம் வானவில் ரிங்டோன்
ஆயிரம் வானவில் வரிகள்
பாடல் ஆயிரம் வானவில்
கார்த்திக் ராஜா ஆயிரம் வானவில்